Tuesday, July 28, 2009

வணிக வங்கி

வணிக வங்கி (Commercial bank) என்பது வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புக்களை மீளப் பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் ஆகும்.இதுவும் ஒருவகை வங்கியியல் முறைமையாகும்.இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும். வணிக வங்கியால் சகலவிதமான வைப்புக்களையும் பேணமுடியும்,இவற்றில் முக்கியமானது நடைமுறை கணக்குகளை பேணல் மற்றும் கடனாக்கம் செய்தல் (accepting deposits and making loans, as well as other fee based services) என்பனவாகும்

பொருளடக்கம்

1 வணிக வங்கிகளின் சேவைகள்

2 வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்

3 இலங்கையின் சில வணிக வங்கிகள்

4 இவற்றையும் பார்க்கவணிக வங்கிகளின் சேவைகள்

இவற்றின் பிரதான தொழிற்பாடு

பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப்(Deposit) பெறல் அவர்கள் கேட்கும் பொழுது அவற்றினைமீளளித்தல்

மேலதிக பற்றுகள்(Over Draft),கடன் வழங்கள்.( loans)

பிணைகள்,முறிகள் (Bonds) போன்றவற்றில் முதலீடல்.

காசோலை(Cheque) வழங்கல்.

ஏனைய தொழிற்பாடுகளாக

நிலையான வைப்புகளை பேணல்.

வெளிநாட்டு நாணய கணக்குகளைப் பேணல்.

வங்கி பாதுகாப்பு பெட்டக வசதிகளை ஏற்ப்படுத்தல்.

நகை அடகுபிடித்தல்.

நாணயமாற்றம் செய்தல்.

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களப் பேணல்.

ATM அட்டை,கடன் அட்டை(Credit card) வழங்குதல் போன்றனவாகும்.

வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்

நடைமுறைக்கணக்கு (Current Deposits)

சேமிப்பு கணக்கு (Savings Deposits)

நிலையான வைப்பு(Fixed Deposits)

அழைப்பு வைப்பு (Call Deposits)

இலங்கையின் சில வணிக வங்கிகள்

இலங்கை வங்கி

மக்கள் வங்கி

கொமர்ஷியல் வங்கி

ஹட்டன் நசனல் வங்கி

சம்பத் வங்கி

செலான் வங்கி

பான் ஏசியா வங்கி

யூனியன் வங்கி

நேசன் டிரஸ்ட் வங்கி

வங்கி

வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

வங்கியால் வழங்கப்படும் சேவைகள்

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல் கடன்களை வழங்குதல் (loans) காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்) கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல். பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல் நாணய மாற்று செய்து கொடுத்தல் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல். வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன
கருமபீடம் அல்லது அலுவலகம் வழியாக

நேரடியாக ATM

மின்னஞ்சல்தொலைபேசி

இணையம்

வங்கி அமைப்புக்கள்

வணிக வங்கி (Commercial bank) - காசோலை வரைவதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு தனது கணக்கிலிருந்து பணத்தினை மீளப்பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வங்கிகள் வர்த்தகவங்கியாகும்.இத்தகைய நிதிச்சேவையை ஏனைய வங்கி அமைப்புகள் மேற்கொள்ளவதில்லை

சேமிப்பு வங்கி (Savings bank)

வியாபார வங்கி (Merchant banks)

கூட்டுறவு வங்கி (Cooperative Banks)

அபிவிருத்தி வங்கி

மூதலீட்டு வங்கி (Investment banks)

மத்திய வங்கி (Central Bank) -

பொருளாதார உறுதி,பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு நாட்டின் பணநிரம்பல்,வங்கி முறைமை போன்றவற்றை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகும். இஸ்லாமிய வங்கி (Islamic banks) - இஸ்லாமிய சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி வழங்கப்படமாட்டாது.

தனிநபர் நிதி

அடமானக் கடன்
கடன் அட்டை
காப்புறுதிசொத்து வரி
வருமான வரி

அடமானக் கடன்

அடமானக் கடன் என்பது நிலம், வீடு, தொழில், அல்லது இதர அசையாப் பொருட்களை ஒரு வங்கி போன்ற ஒரு நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து பெறப்படும் கடன் ஆகும். பொதுவாக இப்படிப் பொறப்படும் நிதி தவணை முறையில் வட்டியுடன் செலுத்தப்படும். செலுத்த முடியாமல் போனால் அடமானம் வைக்கப்பட்ட பொருள் அந்த நிதி நிறுவனத்துக்க் சொந்தமாகும்.

கடன் அட்டை

கடன் அட்டை என்பது பணம் செலுத்தும் முறை. ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்த அவருக்கு வங்கியோ வேறு ஒரு வணிக நிறுவனமோ கடன் வழங்கும். கடன் அட்டையில் நிதி விபரமும் இதர தகவல்களும் சேமிக்கப்படும். ஒவ்வொருமுறை பயன்படுத்தப்படும் பொழுது இத்தகவல்களை கணக்குக்கு ஏற்ப இன்றைப்படுத்தப்படும்.பொதுவாக இப்படி வழங்கப்படும் கடனுக்கு அதிக வட்டி அறவிடப்படும்.

காப்புறுதி

காப்புறுதி என்பது ஒரு இழப்பு அல்லது இடர் ஏற்படக்கூடிய சூழலில் அதில் இருந்து பாதுகாப்பதற்காக அல்லது மீழ்வதற்காக முன்னேற்பாட்டின் படி வழங்கப்படும் நிதி. எவ்வளவு பணம் பெறப்படும் என்பது எவ்வளவு காப்பீட்டு கட்டணம் கட்டப்பட்டது என்பதையும், இடர் எத்தகையது என்பதையும் பொறுத்தது ஆகும். சில தொழிற்பாடுகளுக்கு காப்புறுதி கட்டாயம் தேவைப்படும். எடுத்து காட்டாக கார் ஓட்டும் ஒருவர் காப்புறுதி வைத்திருக்க வேண்டும்.பெரும்பான்மை காப்புறுதிகள் வணிக நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுபவை. சில காப்புறுதிகள் கூட்டுறவுகளால் நிர்வகிக்கப்படுபவை. அரசும் மருத்துவம் போன்ற சில சேவைகளுக்கு காப்புறுதி வழங்குவதில்லை

சொத்து வரி

சொத்து வரி என்பது தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக அந்த நபர், அல்லது நிறுவனம் வதியும் இடத்தை நிர்வகிக்கும் அரசு அல்லது அரசுகள் வரியை விதிக்கும். நிலம், நிலத்தில் உள்ள தென்னை மா பலா போன்ற மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் என பல தரப்பட்ட சொத்துக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.

வருமான வரி

வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். முற்போக்கு, சம விகிதம், Regressive ஆகியவை முக்கிய மூன்று வரி முறைமைகள் ஆகும்.

வரி

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு. வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன. பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.

வரி அறவிடுவதன் நோக்கங்கள்

அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:
சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், சொத்துக்களைப் பாதுகாத்தல், பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல், பொது வேலைகள் (public works), சமூகப் பொறியியல் (social engineering), அரச செயற்பாடுகள். பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன: கல்வி முறைமைகள், உடல்நலம் பேணல் முறைமைகள், வயோதிபர்களுக்கான ஓய்வூதியம், வேலையற்றோர் கொடுப்பனவுகள், சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து. அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்: வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல். தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல், பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது), குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.

பொருளியல் பாதை